சென்னை: மின்வாரியத்தில் பதவிகளை ஒழிப்பது நியாயமான செயலல்ல என மின்வாரிய தலைவருக்கு தொழிற்சங்கத்தினர் கடிதம் அனுப்பியுள்ளனர். இதுகுறித்து தொழிற்சங்கத்தினர் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் இயங்கிக் கொண்டிருக்கக் கூடிய நிர்வாக கிளை, தமிழகம் முழுவதும் பணியாற்றுபவர்களுக்கான நிர்வாகப் பணிகளை செய்து வரக் கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. இங்கு இளநிலை உதவியாளர் முதல் முதுநிலை பணித் தொகுதி அலுவலர் வரை பணியாற்றி வருகின்றார்கள்.