திருச்சி: சமயபுரம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். திருச்சி மாவட்டம் சமயபுரம் அடுத்த மருதூர் கவுண்டர் தெருவில் வசித்தவர் கோவிந்தன் (60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது 5.30 மணியளவில் திடீரென இவரது வீட்டின் மண் சுவர் இடிந்து கோவிந்தன் மீது விழுந்தது. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.