சென்னை எழும்பூர் - குருவாயூர் ரயில் கால அட்டவணையில் மாற்றம்: தெற்கு ரயில்வே தகவல்

நாகர்கோவில்: தெற்கு ரயில்வே திருவனந்தபுரம் கோட்ட செய்திகுறிப்பு: ரயில் எண் 06127 சென்னை எழும்பூர்-குருவாயூர் ரயில் கால அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் சென்னை எழும்பூரில் இருந்து காலை 8.25 மணிக்கு புறப்படுவது இனி 8.40க்கு புறப்படும். தாம்பரத்தில் 8.53க்கு பதில் 9.08க்கு வந்து 9.10க்கு புறப்படும். செங்கல்பட்டில் 9.38க்கு வந்து 9.40க்கும், மேல்மருவத்தூரில் 10.08 க்கு வந்து 10.10க்கும், திண்டிவனத்தில் 10.33க்கு வந்து 10.35க்கும் புறப்படும்.

இந்த மாற்றம் வரும் 3ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இதனை போன்று ரயில் எண் 06064 நாகர்கோவில் - சென்னை எழும்பூர் வாராந்திர ரயில் சென்னை எழும்பூர் சென்றடைவது காலை 4.45க்கு பதில் 4.40க்கு சென்றடையும். இந்த மாற்றம் ஜனவரி 8ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இவ்வாறு செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: