செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் துவங்கப்பட்டு, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் முதல் பேரவை கூட்டம் நேற்று நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம் துவங்கப்பட்டு, ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தின் முதல் பேரவை கூட்டம் செங்கல்பட்டில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் பரணி தலைமை வகித்தார். மாவட்ட இணை செயலாளர் ரவி, மாவட்ட தணிக்கையாளர் சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் குணசேகரன் ஆண்டு அறிக்கையை தாக்கல் செய்தார். ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்க மாநில செயலாளர் சார்லஸ் சசிகுமார் துவக்க உரையாற்றினார். மாவட்ட திட்ட இயக்குனர் செல்வகுமார் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். இதில், தமிழக அரசை வலியுறுத்தி, ஊழியர்கள் பயன்பாட்டுக்காக தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் நடைமேடை அமைக்க வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்ட ஜல்ஜீவன்மிஷன் திட்ட கட்டமைப்பு செயலாக்கத்துக்கு தனியாக ஊழியர் நியமித்தல், ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.