புழல் மத்திய சிறை துப்புரவாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்பு

சென்னை: புழல் மத்திய சிறை 2ல் காலியாக உள்ள துப்புரவு பணியாளர் பணியிடத்திற்கு விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழில் எழுத, படிக்க தெரிந்தவராக இருக்க வேண்டும்.  வயது வரம்பு 1.7.2020 அன்று 18 வயது நிரம்பிய ஆதிதிராவிடர் மற்றும் பொது பிரிவு இனத்தவராக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 1.7.2020 அன்று எஸ்.சி. / எஸ்.சி.ஏ  35, எஸ்.டி  35, பி.சி - 32, எம்.பி.சி.  32, ஓ.சி. - 30 வயதிற்குள் இருத்தல் வேண்டும்.  விண்ணப்பங்கள் 4ம் தேதிக்குள் சிறைக்கண்காணிப்பாளர், மத்திய சிறை 2, புழல், சென்னை - 66, தொலைபேசி எண். 044-26590350 என்ற முகவரிக்கு வந்து சேர வேண்டும் என கலெக்டர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.

Related Stories: