சென்னை: 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் 31.52 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி முதல் செயல்பட தொடங்கியது. அதன்படி, 7.9.2020 முதல் 31.12.2020 வரை மொத்தம் 31,52,446 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். இதில், 7.9.2020 முதல் 30.9.2020 வரை 3,60,193 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர். 1.10.2020 முதல் 31.10.2020 வரை மொத்தம் 7,03,223 பேரும், 1.11.2020 முதல் 30.11.2020 வரை 8,58,546 பேரும், 1.12.2020 முதல் 31.12.2020 வரை 12,30,484 பேரும், 21.12.2020 அன்று மட்டும் 47,214 பேர் மெட்ரோவில் பயணம் செய்துள்ளனர்.