உயரழுத்த மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை மிரட்டல்

துரைப்பாக்கம்: செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியில், குடிசை மாற்று வாரியம் சார்பில் புதிதாக 5 அடுக்கு குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. இதற்காக, அங்குள்ள தீப்பந்த அம்மன்  கோயிலை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சங்கர் (42) எதிர்ப்பு தெரிவித்து, நேற்று அங்குள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். போலீசார் விரைந்து வந்து,  நைசாக பேசி அவரை கீழே இறக்கிஎச்சரித்து அனுப்பினர்.

Related Stories: