லண்டனிலிருந்து வந்த 24 பேர் பாதிப்பு தமிழகத்தில் மேலும் புதிதாக 921 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் தற்போது வரை லண்டனில் இருந்து வந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 44 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று புதிதாக 921 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் நேற்று மட்டும் 67,151 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 921 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லண்டனில் இருந்து வந்தவர்கள் மற்றும் தொடர்பில் இருந்த 44 பேருக்கு கொரோனா ெதாற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து தமிழகத்தில் 8,18,935 பேருக்கு தொற்று உறுதியானது. நேற்று மட்டும் 1,029 பேர் குணமடைந்து உள்ளனர். மொத்தம் 7,98,420 பேர் குணமடைந்துள்ளனர். 8,380 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் அரசு மருத்துவமனையில் 8 பேரும் தனியார் மருத்துமனையில் 5 பேர் என 13 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதை சேர்த்து மரணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 12,135 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: