அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை: புத்தாண்டை முன்னிட்டு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் நேரில் வாழ்த்து

சென்னை: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் இன்று காலை மரியாதை செலுத்தினார். முன்னதாக அவரை திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் நேரில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை ெசலுத்தினார். தொடர்ந்து அவர் கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.

அப்போது தூர்கா ஸ்டாலின், பொது செயலாளர் துரைமுருகன், துணை பொது செயலாளர் ஆ.ராசா, எம்எல்ஏக்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, டி.ஆர்.பி.ராஜா, பகுதி செயலாளர் மதன்மோகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி, எஸ்.எஸ்.பழனிமாணிக்கம், கலாநிதி வீராசாமி, மாவட்ட செயலாளர்கள் மா.சுப்பிரமணியன், மாதவரம் சுதர்சனம், மயிலை த.வேலு, இளைய அருணா, சுந்தர், ஆவடி நாசர், தளபதி, தங்க தமிழ் செல்வன்.

எம்எல்ஏக்கள் தங்கம் தென்னரசு, பெரிய கருப்பன், அரவிந்த் ரமேஷ், ஆர்.டி.சேகர், ரவிச்சந்திரன், வாகை சந்திர சேகர், தாயகம் கவி, எழிலரசன், நந்தகுமார், திருவையாறு துரை சந்திர சேகர், ஆலங்குடி மெய்ய நாதன், மூர்த்தி, நீலமேகம், மணிமாறன், ஏ.கே.எஸ்.விஜயன், பொன்முத்துராமலிங்கம் மற்றும் திண்டுக்கல் ஐ.லியோனி, நாஞ்சில் சம்பத், வர்த்தகர் அணி செயலாளர் கவிஞர் காசி முத்து மாணிக்கம், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஏ.எம்.வி.பிரபாகர் ராஜா உள்ளிட்ட பல்வேறு திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: