சென்னை: மெரினா கடற்கரையில் 900 தள்ளுவண்டி கடைகள் ஒதுக்கீடு தொடர்பான வழக்கு நேற்று நீதிபதிகள் மகாதேவன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தெரு வியாபாரிகள் பாதுகாப்பு மற்றும் முறைப்படுத்தல் சட்டப்படி, முறையான கணக்கெடுப்புகளை நடத்தாமல், அடையாள அட்டைகளை வழங்கியுள்ளதாக மாநகராட்சி மீது மனுதாரர் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.