சென்னை: தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட தொழில் மற்றும் வணிகத்துறையில் உதவி இயக்குநர் மற்றும் உதவி கண்காணிப்பாளர் பணிகளுக்கு வரும் 9 மற்றும் 10ம் தேதிகளில் எழுத்து தேர்வு நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கை: தேர்வாணையத்தால் கடந்த மாதம் 9ம் தேதி அறிவிக்கப்பட்ட தொழில் மற்றும் வணிகத்துறையில் உதவி இயக்குநர் (தொழில்நுட்ப பிரிவு) மற்றும் உதவி கண்காணிப்பாளர் (வேதியியல் பிரிவு) பணிகளுக்கான எழுத்து தேர்வு வரும் 9ம் தேதி காலை 9.15 மணி மற்றும் மதியம் 1.45 மணிக்கு 5 மாவட்டங்களில் 13 தேர்வு மையங்களிலும், வரும் 10ம் தேதி மதியம் 1.45 மணிக்கு மட்டும் 5 மாவட்டங்களில் 5 தேர்வு மையங்களிலும் நடைபெறும்.