மாமல்லபுரம்: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் மற்றும் சுற்றுவட்டார மீனவ குப்பங்களில், நேற்று காலை திடீரென பலத்த கடல் சீற்றம் ஏற்பட்டு, கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால், மாமல்லபுரம் குப்பம், தேவனேரி, கொக்கிலமேடு குப்பம், வெண்புருஷம், புதிய கல்பாக்கம், புதுஎடையூர்குப்பம், பட்டிபுலம் குப்பம், நெம்மேலிகுப்பம் ஆகிய மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. கடலுக்கு சென்ற ஒரு சில மீனவர்களுக்கு வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்ததால், அவர்கள் அவசர அவசரமாக கரை திரும்பினர்.