டெல்லி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வாழும் இந்திய குடிமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என கூறியுள்ளார். பிறக்கும் புத்தாண்டில், அமைதியான, அக்கறையான, கருணையான சமுதாயத்தை உருவாக்க நாம் உறுதி எடுத்துக் கொள்வோம்.