புதுடெல்லி: டெல்லி விலங்கியல் பூங்காவில் நிர்பயா என்கிற பெண் புலி பிரசவத்தின் போது ஏற்பட்ட சிக்கலால் உயிரிழந்த நிலையில், தாய் இறந்த 17 நாட்களுக்கு பின்னர் அதன் குட்டியும் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. டெல்லி விலங்கியல் பூங்காவில் நிர்பயா என்கிற வெள்ளைப்புலி இரண்டு குட்டிகளை ஈன்றது. அதன்பின் அடுத்தகுட்டிகளை ஈன்ற முயற்சித்தபோது ஏற்பட்ட பிரசவ சிக்கலால் துடித்தது. எனினும், தொடர்ந்து குட்டிகளை பிரசவிக்க முடியாமல் பரிதாபமாக கடந்தடிசம்பர் 14ம் தேதியன்று உயிரிழந்தது. அதனுடன் குட்டி ஒன்றும் இறந்தது.