சென்னை: தேர்வாணையத்தால் நடத்தப்படும் போட்டி தேர்வுகளுக்கு பின்பற்றப்படும் வழிகாட்டு நெறிமுறைகளை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டுள்ளதாவது: காலை 9.15 மணிக்குள் தேர்வு கூடத்திற்கு சென்றடைய வேண்டும். நேரம் தவறி வரும் தேர்வர்கள் தேர்விற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். கருப்பு நிற பால்பாயிண்ட் பேனாவை மட்டுமே பயன்படுத்தி தேர்வினை எழுத வேண்டும். விடைத்தாளில் இரண்டு இடங்களில் கையொப்பம் இட்டு இடது கை பெருவிரல் ரேகை பதிக்க வேண்டும். விடை தெரியாத கேள்விகளுக்கு விடைத்தாளில் ‘ E ‘ என்ற வட்டத்தினை கருமையாக்க வேண்டும்.