சென்னை: தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டம் வெளியிடப்பட்ட அறிக்கை: வருகிற ஜனவரி 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் (வெள்ளி, சனி, ஞாயிறு) புறநகர் சிறப்பு ரயில்கள் வார நாட்களில் பின்பற்றப்படும் கால அட்டவணைப்படியே முழு அளவில் இயக்கப்படும். மேற்குறிப்பிட்டுள்ள தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் சேவையானது சென்னை புறநகர் பகுதிகளில், கடந்த 21ம் தேதி முதல் 27 தேதி வரை இயக்கப்பட்ட கால அட்டவணைப்படியே இயக்கப்படும்.