சென்னை: ஜெயலலிதா குறித்து கருத்து தெரிவித்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மீதான 4 அவதூறு வழக்குகளை சிறப்பு நீதிமன்றம் முடித்து வைத்தது. மறைந்த ஜெயலலிதா கடந்த 2016ம் ஆண்டு முதல்வராக இருந்தார். அப்போது, பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் மற்றும் மது கடைகள் தொடர்பான விவகாரத்தில், ஜெயலலிதா குறித்து தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர், இளங்கோவன் கருத்துக்களை தெரிவித்திருந்தார். அவை ஜெயலலிதாவுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் இருந்ததாக கூறி, இளங்கோவன் மீது, தமிழக அரசு சார்பில் நான்கு அவதுாறு வழக்குகள் தொடரப்பட்டன.