சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா பூந்தமல்லி அருகே உள்ள தனியார் விடுதியில் கடந்த 9ம்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத் மீது கடந்த 14ம் தேதி கைதானார். இந்நிலையில் நடிகை சித்ரா தற்கொலை குறித்து ஸ்ரீபெரும்புதூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீயும் விசாரணை செய்து 250 பக்கம் கொண்ட விசாரணை அறிக்கையை நசரத்பேட்டை போலீசில் அளித்துள்ளார்.