சென்னை: மோடியும், ரஜினியும் எனக்கு இரண்டு கண்கள், பாஜகவோடு எனக்கு நல்ல உறவு உள்ளது, மாற்றம் வேண்டும் என்பதற்காகவே ரஜினியுடன் இணைந்தேன் என அர்ஜூன மூர்த்தி பேட்டியளித்தார். யாரும் ரஜினியின் முடிவை எதிர்த்து போராட வேண்டாம் எனவும் கூறினார். தமிழக மக்களின் நலனை ரஜினி எப்போதும் விட்டுத்தர மாட்டார். தமிழக மக்களுக்கு எதுவும் செய்ய முடியவில்லையே என்ற மன உளைச்சலில் ரஜினிகாந்த் தற்போது உள்ளார். தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என ரஜினி விரும்பியது உண்மை தான் என கூறினார்.