அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கணேஷ்நகரில் சிறிய மழைக்கே சாலை சகதிகாடாக மாறி விடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்டது கணேஷ்நகர், தேவாடெக்ஸ் காலனி. விரிவாக்க பகுதிகளான இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் நகராட்சி மூலம் எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. கணேஷ்நகர் செல்லும் நுழைவு பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வாறுகால் வசதி இல்லாததால் தற்போது பெய்த மழையால் சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.