அருப்புக்கோட்டை கணேஷ்நகரில் சிறிய மழைக்கே சகதிகாடாகும் சாலை: பொதுமக்கள் அவதி

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை கணேஷ்நகரில் சிறிய மழைக்கே சாலை சகதிகாடாக மாறி விடுவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அப்புக்கோட்டை நகராட்சிக்குட்பட்டது கணேஷ்நகர், தேவாடெக்ஸ் காலனி. விரிவாக்க பகுதிகளான இங்கு ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் நகராட்சி மூலம் எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படவில்லை. கணேஷ்நகர் செல்லும் நுழைவு பகுதியில் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வாறுகால் வசதி இல்லாததால் தற்போது பெய்த மழையால் சாலையில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘சிறிய மழை பெய்தாலே கணேஷ்நகர் சாலை சகதிகாடாக மாறி விடுகிறது. இதனால் சைக்கிள். டூவீலரில் செல்வோர் வழுக்கி விழுந்து காயமுறுகின்றனர். எனவே நகராட்சி நிர்வாகம் கணேஷ்நகர் பகுதியில் சாலை, வாறுகால் வசதிகள் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Related Stories: