ஆலந்தூர்: ஆதம்பாக்கம் பார்த்தசாரதி நகரில் சைக்கிள் பஞ்சர் கடையில் வேலை செய்யும் 35 வயது மதிக்கத்தக்க வாய்பேச முடியாத நபருக்கு நடத்திய பரிசோதனையில் தொற்று இருப்பதாக கூறி ஆலந்தூர் மண்டல 163வது வார்டு சுகாதார ஆய்வாளர் ரேவதி தலைமையிலான ஊழியர்கள் அந்த நபரை தேடி பஞ்சர் கடைக்கு சென்றனர். அங்கு அவர் இல்லாததால் பக்கத்து தெருவில் உள்ள அவரது வீட்டிற்கு சென்றபோது உறவினர்கள் அவருக்கு கொரோனா இல்லை என வாக்குவாதத்தில் ஈடுபட்ட சமயத்தில், அவர் அங்கிருந்து தப்பி ஓடமுயன்றார். இதைக் கண்ட சுகாதார ஊழியர்கள் அந் நபரை விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.