பெரியகுளம்: டிஎன்டி பட்டியலில் 68 சமுதாய உட்பிரிவுகளை சேர்க்க வேண்டும், இரட்டை சான்றிதழ் முறையை நிறுத்திவிட்டு ஒற்றை சான்றிதழ் முறையை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, சீர்மரபினர் நலச்சங்கம் சார்பில் தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையில் உள்ள துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டை முற்றுகையிடுவதாக அறிவித்திருந்தனர்.