சென்னை: சென்னை கோடம்பாக்கம் வேளாளத் தெருவில் வசித்து வந்த ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ யசோதா நேற்று காலமானார். அவருக்கு வயது (75).. இவர் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று 4 முறை எம்எல்ஏவாக இருந்தவர். . யசோதா கடந்த 3ம் தேதி சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற உயர்மட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டபோது மயங்கி விழுந்தார். இதைத் தொடர்ந்து அவர் கடந்த 23ம் தேதியில் இருந்து சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.