சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 7.5 சதவீத இட ஒதுக்கீடு அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் உட்பட அனைத்துப் பணியாளர்களுக்கும் அரசு தான் ஊதியம் வழங்கி வருகின்றது.