பைக் மீது வேன் மோதி கம்பெனி ஊழியர் பலி

ஆவடி: ஆவடி அடுத்த பாலவேடு அண்ணாநகரை சேர்ந்தவர் விஜயகாந்த்(34). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு விஜயகாந்த் வீட்டில் இருந்து பைக்கில் வெளியே புறப்பட்டார். வண்டலூர் - நெமிலிச்சேரி 400 அடி சாலையில், தவறான திசையில் பைக்கில் வந்துள்ளார். அப்போது, பைக் மீது அந்த வழியாக வந்த வேன் மோதியது.

இதில், தூக்கி வீசப்பட்ட விஜயகாந்த் சம்பவ இடத்திலேயே மண்டை உடைந்து பலியானார். தகவலறிந்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: