ஆவடி: ஆவடி அடுத்த பாலவேடு அண்ணாநகரை சேர்ந்தவர் விஜயகாந்த்(34). அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு விஜயகாந்த் வீட்டில் இருந்து பைக்கில் வெளியே புறப்பட்டார். வண்டலூர் - நெமிலிச்சேரி 400 அடி சாலையில், தவறான திசையில் பைக்கில் வந்துள்ளார். அப்போது, பைக் மீது அந்த வழியாக வந்த வேன் மோதியது.