சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்த கண்காணிப்பாளர்கள் 12 பேரை பணியிட மாற்றம் செய்தும், முதுநிலை ஆய்வர், தலைமை எழுத்தராக இருந்த 9 பேருக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு வழங்கியும் கமிஷனர் பிராபகர் உத்தரவிட்டுள்ளார். அவரது உத்தரவு: ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் முத்துரத்தினவேலு, சென்னை-1 இணை ஆணையர் அலுவலக மேலாளர். மாரியப்பன் சிவகங்கை ஆணையர் அலுவலக மேலாளர், கண்காணிப்பாளர் பாஸ்கரன் சென்னை-2 இணை ஆணையர் அலுவலக மேலாளர், சென்னை இணை ஆணையர் அலுவலக மேலாளர் ராஜேந்திரன் திருத்தணி கோயில் கண்காணிப்பாளர். வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் கண்காணிப்பாளர் ராஜா, காஞ்சிபுரம் இணை ஆணையர் மேலாளர்.