இந்து சமய அறநிலையத்துறையில் 21 கண்காணிப்பாளர் டிரான்ஸ்பர் கமிஷனர் பிரபாகர் உத்தரவு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு இடங்களில் பணிபுரிந்த கண்காணிப்பாளர்கள் 12 பேரை பணியிட மாற்றம் செய்தும், முதுநிலை ஆய்வர், தலைமை எழுத்தராக இருந்த 9 பேருக்கு கண்காணிப்பாளராக பதவி உயர்வு  வழங்கியும் கமிஷனர் பிராபகர் உத்தரவிட்டுள்ளார்.  அவரது உத்தரவு: ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் முத்துரத்தினவேலு, சென்னை-1 இணை ஆணையர் அலுவலக மேலாளர். மாரியப்பன் சிவகங்கை ஆணையர் அலுவலக மேலாளர்,  கண்காணிப்பாளர் பாஸ்கரன் சென்னை-2 இணை ஆணையர் அலுவலக மேலாளர், சென்னை இணை ஆணையர் அலுவலக மேலாளர் ராஜேந்திரன் திருத்தணி கோயில் கண்காணிப்பாளர். வாழைத்தோட்டத்து அய்யன் கோயில் கண்காணிப்பாளர்  ராஜா, காஞ்சிபுரம் இணை ஆணையர் மேலாளர்.

ஆணையர் அலுவலக கண்காணிப்பாளர் ஹம்சன், நாகை இணை ஆணையர் மேலாளர். திருத்தணி முருகன் கோயில் கண்காணிப்பாளர் சந்திரசேகரன், தூத்துக்குடி இணை ஆணையர் மேலாளர் அலுவலகம் என 12 பேர் பணியிட மாற்றம்  செய்யப்பட்டனர். அதே போன்று, திருநெல்வேலி தலைமை எழுத்தர் கணேஷ் வைத்திலிங்கம் ஆணையர் அலுவலகம், உளுந்தூர்பேட்டை ஆய்வர் சுரேஷ் ஆணையர் அலுவலகம், சங்கரன் கோயில் ஆய்வர் ஏமையா ஆணையர் அலுவலகம்,  பவானி சங்கமேஸ்வரர் கோயில் ஆய்வர் பாலசுந்தரி ஆணையர் அலுவலகம், தஞ்சாவூர் ஆய்வர் கவியரசு ஆணையர் அலுவலகம் என 9 பேருக்கு பதவி உயர்வு வழங்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: