தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற மனமில்லாமல் போனது ஏன்?: டி.டி.வி. தினகரன்

சென்னை: தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளம் அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற மனமில்லாமல் போனது ஏன்? என்று டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். சாமந்தான்பேட்டையில் தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்குதளத்தை உடனே அமைக்க வேண்டும். மீனவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மீனவர்களிடம் பேசி தீர்வு காண முடியாமல் மீன்வளத்துறை அமைச்சர் அப்படி என்ன முக்கிய வேலையில் உள்ளார்? என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories: