புதிய கொரோனா வைரஸ் பீதியால் துபாய் சிறப்பு விமானம் ரத்து

சென்னை: ஐரோப்பிய நாடுகளில் உருமாறிய புதிய கொரோனா வைரஸ்  பரவலையொட்டி மக்களிடையே அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து சிறப்பு அனுமதி பெற்று சிறப்பு விமானங்களில் வெளிநாடு செல்லும் பயணிகள் பலர் தங்கள் விமான பயணங்களை ரத்து செய்கின்றனர். சென்னையிலிருந்து துபாய் செல்லும் சிறப்பு பயணிகள் விமானம்  இண்டிகோ (6E 65) நேற்று அதிகாலை 12.50 மணிக்கு புறப்பட வேண்டிய விமானமும், அதேபோல் துபாயிலிருந்து நேற்று காலை 10.50  மணிக்கு சென்னை வரவேண்டிய சிறப்பு பயணிகள் விமானம் இண்டிகோ (6E 66) ஆகியவை நேற்று திடீரென ரத்து செய்யப்பட்டன. அதற்கு காரணம், இந்த சிறப்பு இண்டிகோ விமானத்தில் துபாய் செல்ல முன்பதிவு செய்திருந்த பயணிகளுக்கு, நிர்வாக காரணங்களுக்காக விமானம் ரத்து, வேறு தேதிகளில் பயணித்துக்கொள்ளலாம் என்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. ஆனாலும் சில பயணிகள் சென்னை  விமானநிலையம் வந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் கவுன்டரில் திடீரென ரத்துக்கு என்ன காரணம் என்று வாக்குவாதம் செய்தனர். அவர்களை விமானநிலைய அதிகாரிகள் அமைதிப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Related Stories: