தரைப்பாலம் இல்லாததால் நீரில் இறங்கி உடல் அடக்கம்.: 50 ஆண்டுகளாக இன்னலுக்கு ஆளாவதாக மக்கள் குமுறல்

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நந்தி மங்களம் கிராமத்தில் மயானத்திற்கு செல்ல சரியான தரைப்பாலம் இல்லாததால் தண்ணீரில் இறங்கி சடலத்தை எடுத்து செல்லும் பரிதாப நிலை தொடர்கிறது. இந்த கிராமத்தை சேர்ந்த 97 வயது மூதாட்டி சின்ன கனகாம்பாள் நேற்று உயிரிழந்த போதும் அவரது உடலை அடக்கம் செய்வதில் மக்கள் இன்னலை சந்தித்தனர்.

கால்வாயில் தண்ணீர் சென்றதால் சடலத்தை சுமந்த படி தண்ணீரில் இறங்கி மறு கரைக்கு என்று உறவினர்கள் அடக்கம் செய்தனர். 50 ஆண்டுகளாக இப்படி பாதை இல்லாமல் இன்னலுக்கு ஆளாவதாக நந்தி மங்களம் கிராமமக்கள் குமுறுகின்றனர். இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு தரைப்பாலம் அமைத்து தர வேண்டும்  என அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related Stories: