எம்.ஜி.ஆர். என்ன நல்லாட்சி செய்தார் என கேட்ட சீமான் பேச்சுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம்..!

சென்னை: எம்.ஜி.ஆர். என்ன நல்லாட்சி செய்தார் என்று கேட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சுக்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். எம்.ஜி.ஆர். கொடுத்த நல்லாட்சியை தருவேன் என்று ரஜினி சொன்னதால், கமல்ஹாசனும் அதையே சொல்லி வருவதால், பிரபாகரன் மீது மதிப்பு வைத்திருந்தார் எம்.ஜி.ஆர். அதனால் அவரை மதிக்கிறோம். மற்றபடி அவர் என்ன நல்லாட்சி செய்தார்? என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து, சென்னை மெரினாவில் எம்.ஜி.ஆரின் 33-வது நினைவு தினத்தை முன்னிட்டு ,அவரது சமாதியில் அஞ்சலி செலுத்திய வைகோவிடம் சீமானின் எம்.ஜி.ஆர். குறித்த பேச்சு பற்றி கேட்டபோது, ‘’பெரியாரின் எழுத்துக்களை எம்.ஜி.ஆர். சட்டமாக்கினார். பசித்த வயிறுக்கு உணளித்தார். பிரபாகரனுக்கு அரணாக இருந்து ஈழத்தமிழர் மனதில் எப்போதும் இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர். அவர் செய்தது மாதிரி வேறு எவரும் செய்துவிட முடியாது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: