சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் சிறையில் பேரறிவாளன் அடைக்கப்பட்டுள்ளார். உடல்நலம் சரியில்லாமல் சமீபத்தில் பரோலில் வெளியில் வந்த பேரறிவாளன், கடந்த 7ம் தேதி சிறைக்கு சென்றார். இந்நிலையில் பேரறிவாளனை சந்திக்க அற்புதம்மாளுக்கும், உறவினர்களுக்கும் அனுமதி வழங்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், டி.கிருஷ்ணகுமார் விசாரித்தனர். அவர்கள் பிறப்பித்த உத்தரவில், பேரறிவாளனின் உறவினர்கள், நண்பர்களை காணொலி காட்சி வாயிலாக சந்திக்க அனுமதிக்க வேண்டும்.