சென்னை: இங்கிலாந்தில் இருந்து டெல்லி வழியாக சென்னை வந்தவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தகவல் தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் இருந்து கடந்த 10 நாட்களில் தமிழகம் வந்தவர்களுக்கு பரிசோதனை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார். இங்கிலாந்தில் வீரியமிக்க புதிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் சென்னை வந்தவருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.