33வது ஆண்டு நினைவு நாளையொட்டி எம்ஜிஆர் சமாதியில் இபிஎஸ், ஓபிஎஸ் அஞ்சலி

சென்னை: எம்ஜிஆரின் 33வது ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 24ம் தேதி சென்னையில் அவருடைய நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள். இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 33வது ஆண்டு நினைவு நாளான வருகிற 24ம் தேதி, காலை 10 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, எம்ஜிஆர் நினைவிட வளாகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, கிளை, வார்டு, மாநகராட்சி பகுதி, வட்ட அளவில், கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் தங்கள் பகுதிகளில் ஆங்காங்கே எம்ஜிஆர் திருஉருவ படங்களை வைத்து, மாலை அணிவித்து அஞ்சலி செலுத்த வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்கள் செய்திட வேண்டும்.

Related Stories: