சென்னை: எம்ஜிஆரின் 33வது ஆண்டு நினைவு நாளையொட்டி வருகிற 24ம் தேதி சென்னையில் அவருடைய நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்கள். இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 33வது ஆண்டு நினைவு நாளான வருகிற 24ம் தேதி, காலை 10 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர்.