அதிக நெல் மகசூல் காண்பிக்கும் விவசாயிக்கு நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறனுக்கான விருது

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளின் தலைவர் நாராயணசாமி நாயுடு தனது பேச்சு, செயல் மற்றும் தலைமைப் பண்புகளால் தமிழ்நாடு விவசாயிகளை ஒருங்கிணைத்து விவசாயிகளின் ஒப்பற்ற தலைவராக திகழ்ந்தார். 1973ம் ஆண்டில் தமிழக விவசாயிகள் சங்கத்தை தொடங்கி அதன் தலைவராக பொறுப்பேற்று, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டு, விவசாய மாநாடுகளை நடத்தி விவசாயிகளின் உரிமைகளுக்காக பாடுபட்டார். தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்காக பாடுபட்டார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் நடந்த விவசாயிகள் பொதுக்கூட்டத்தில் பேசிவிட்டு ஓய்வெடுத்தபோது தான் தன் இன்னுயிரை நீத்தார்.

அவரின் நினைவு நாளாளில் அவரைப் போற்றுவதில், நாம் எல்லாம் பெருமை அடைகிறோம். நாராயணசாமி நாயுடு விவசாயிகளுக்கு, ஆற்றிய சிறந்த சேவையை போற்றிப் பாராட்டும் வகையில், குடியரசு தினவிழாவில், திருந்திய நெல் சாகுபடி தொழில் நுட்பத்தைக் கடைபிடித்து, அதிக நெல் மகசூல் பெற்றமைக்காக வழங்கப்படும் விருது, இந்த ஆண்டு முதல் ‘நாராயணசாமி நாயுடு நெல் உற்பத்தித் திறனுக்கான விருது’ என்ற பெயரில் வழங்கப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: