வேளச்சேரி: புதிய மின் இணைப்பு வழங்க 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவிப் பொறியாளர் மற்றும் அவரது உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவர், அதே பகுதியில் புதியதாக வீடு கட்டி வருகிறார். இதற்கு மின் இனைப்பு கேட்டு, மேடவாக்கம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்து இருந்தார். மின் இணைப்புக்கு விண்ணப்பித்து நீண்ட நாட்கள் ஆகியும் இணைப்பு வழங்கப்படவில்லை. இது தொடர்பாக, மின்வாரிய உதவி பொறியாளர் ரமேஷிடம் (45) கேட்டபோது, 10 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால்தான் மின் இணைப்பு வழங்கப்படும் எனக் கூறியுள்ளார்.லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணி, இதுகுறித்து சட்ட பஞ்சாயத்து அமைப்பிடம் தெரிவித்தார். அவர்கள், ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள், சுப்பிரமணியனிடம் ரசாயனம் தடவிய ₹10 ஆயிரத்தை கொடுத்து, உதவி பொறியாளர் ரமேஷிடம் கொடுக்கும்படி கூறினர்.