களக்காடு: களக்காடு அருகே மீண்டும் கரடி நடமாட்டம் காணப்பட்டதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காடு அருகே சிங்கிகுளத்தில் கடந்த சில மாதங்களாக கரடிகள் நடமாட்டம் காணப்படுகிறது. அங்குள்ள பொத்தையில் தஞ்சமடைந்துள்ள கரடிகள் உணவுக்காக விளைநிலங்களில் புகுந்து வருகின்றன. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பட்டப்பகலில் ஊருக்குள் சுற்றிய கரடி வனத்துறை ஊழியர் உள்பட இருவரை தாக்கியது. அந்த கரடியை வனத்துறையினர் மயக்க மருந்து செலுத்தி பிடித்தனர். அதன்பின் கடந்த 1 மாதத்திற்கு முன்பு விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிய கரடியை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.