சென்னை: மதுரவாயல் - வாலாஜா இடையே 2 சுங்கச் சாவடிகளில் பொங்கல் வரை 50% கட்டணம் வசூலிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையை அடுத்த மதுரவாயல் முதல் வாலாஜா வரை தேசிய நெடுஞ்சாலை முறையாக பராமரிக்கப்படுவதில்லை என்ற கடிதத்தின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக எடுத்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு கடந்த முறை நீதிபதிகள், சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் போடும் சாலைகள் அனைத்தும் தேசிய நெடுஞ்சாலை காங்கிரஸ் தரப்பில் இல்லை என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும் பழுதடைந்த நிலையில் உள்ள மதுரவாயல்-வாலாஜா நெடுஞ்சாலையை பல நாட்களாக ஏன் சரிசெய்யவில்லை? என்றும் கேள்வி எழுப்பப்பட்டது. அச்சமயம் இன்னும் 10 நாட்களுக்குள் சாலை முழுவதும் பழுதுபார்க்கப்படும் என்று தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.