டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஓரிரு நாளில் நியமன ஆணை: அமைச்சர் செங்கோட்டையன் உறுதி

கோபி: கடந்த 2018ல் ஆசிரியர் தகுதி தேர்வெழுதியவர்களில் 857 பேர் தேர்ச்சி பெற்றனர். அதில் 3 இடங்களில் 41 பேர், கணினி பழுது காரணமாக செல்போன் மூலம் தேர்வு எழுதியதாக கூறப்படுகிறது. இதனால், தேர்ச்சி பெறாதவர்கள் இது குறித்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கு காரணமாக தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் குறிப்பிட்ட தேர்வு அறையில் இருந்தவர்களுக்கு மறு தேர்வு வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்குவதில் தடை இல்லை என தெளிவுப்படுத்தியது. இதைத்தொடர்ந்து, தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் கடந்த வாரம் கோபியில் அமைச்சர் செங்கோட்டையனை சந்தித்து மனு அளித்தனர். அப்போது, முதலமைச்சரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறினார்.

Related Stories: