ஸ்ரீபெரும்புதூர்: ஒரகடம் அருகே, 4 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட மீன் வியாபாரியை போலீசார் பத்திரமாக மீட்டனர். இதுதொடர்பாக, அவரை கடத்திய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த தேவரியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் ராஜன் (45). அதே பகுதியில் மீன், இறைச்சி கடை நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு ராஜன், வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது 2 பைக்கில் வந்த 4 பேர், ராஜனை கத்திமுனையில் மிரட்டி பைக்கில் ஏற்றி சென்றனர். தேவேரியம்பாக்கம் அருகே சங்கராபுரம் கிராமத்தில், ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் வைத்து, ராஜனிடம் 4 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளனர். மேலும், அவரது மனைவிக்கு போன் செய்து, சாலவாக்கம் அருகே எடமச்சி மலைக்கு பணத்தை கொண்டு வரும்படி கூறியுள்ளனர். பணத்தை கொடுக்காவிட்டால் உனது கணவரை கொலை செய்துவிடுவோம் என மிரட்டினர்.