பிரிட்ஜ் வெடித்து வீடு தரைமட்டமான சம்பவத்தில் மனைவியை தொடர்ந்து கணவனும் பலி: தீவிர சிகிச்சையில் மகள்

திருப்போரூர்: திருப்போரூர் அருகே பால் எடுக்க பிரிட்ஜை திறந்தபோது, திடீரென வெடித்த விபத்தில் இளம்பெண் இறந்தார். இதைதொடர்ந்து அவரது கணவர், நேற்று இறந்தார். மகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. சென்னை அடுத்த திருப்போரூர் அருகே கேளம்பாக்கம் ஐயப்பன் தெருவை சேர்ந்தவர் ரவி (35). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி மோகனா (30). இவர்களது மகள் லேகா (4). கடந்த 13ம் தேதி அனைவரும் வீட்டில் தூங்கினர். மறுநாள் காலை காபி போடுவதற்காக பிரிட்ஜில் இருந்த இருந்த பால் பாக்கெட்டை எடுக்க மோகனா முயன்றார். அப்போது பயங்கர சத்தத்துடன் பிரிட்ஜ் வெடித்தது. இதில், ரவி, மோகனா, லேகா ஆகியோர் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு கடந்த 16ம் தேதி மோகனா, சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்நிலையில், நேற்று காலை ரவி சிகிச்சை பலனின்றி இறந்தார். குழந்தை லேகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. புகாரின்படி கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: