சென்னை துறைமுகத்தில் சிபிஐ சோதனை:22 ஆவணங்கள் பறிமுதல்

சென்னை: துறைமுக தலைமை பொறியாளரின் நேர்முக உதவியாளராக பணியாற்றியவர் பூபதி. இவர் சென்னை துறைமுகத்தில் உதவி மேலாளர் வேலை வாங்கி தருவதாக கூறி தேவராஜ் என்பவரிடம் இருந்து ரூ.97 லட்சம் லஞ்சமாக பெற்று வேலை வாங்கி தரவில்லை. இது தொடர்பாக அவர் சிபிஐயில் அளித்தார். இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் துறைமுக பொறுப்பு கழகத்தில் உள்ள அவரது அறை உள்ளிட்ட 3 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். இதில் 22 ஆவணங்கள் பறிமுதலானது.

Related Stories: