தேவாரம்: தேவாரம் அருகே வனப்பகுதியில், சுமார் 3 கி.மீ கேரள மலைக்கிராமங்கள் உள்ளன. அடர்ந்த காடுகளில் மலைமாடுகள், மான், யானைகள், குரங்குகள் வாழ்கின்றன. தேவாரம், கோம்பை, பண்ணைப்புரம் உள்ளிட்ட ஊர்களை சேர்ந்த பெரும்பாலானோருக்கு இப்பகுதியில் விவசாய நிலங்கள் உள்ளன. இதில் கம்பு, சோளம், மக்காச்சோளம், பயிடப்பட்டுள்ளது. கடந்த 1 மாதமாகவே பண்ணைப்புரம் மலைப்பகுதியில் இரண்டு காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளது. இவை அடர்ந்த காடுகளில் இருந்து மக்கள் நடமாடும் இடங்களுக்கு வந்து மிரட்டுகின்றன. பண்ணைப்புரம் சுருளி மனைவி, தங்கமணி என்பவரது சோளத்தோட்டம், மலையடிவாரத்தை ஒட்டி சங்கப்பன்குளம் பகுதியில் உள்ளது.