சென்னை: ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் வழக்கு தொடர்பாக டிஜிபி மற்றும் போலீஸ் கமிஷனர் ஆகியோர் ஐகோர்ட்டில்நேற்று ஆஜரானார்கள்
உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை அவதூறாக பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாக உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி சி.கர்ணன் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.