தாம்பரத்திலிருந்து வடகிழக்கு மாநிலத்திற்கு ரயில்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை:  நியு டின்சுகியா - தாம்பரம் - நியு டின்சுகியா (05930, 05929) இடையேயான வாராந்திர சிறப்பு ரயிலானது, வரும் 28ம் தேதி முதல் திங்கள் கிழமைகளில் இயக்கப்படும். அதன்படி அஸ்ஸாம் மாநிலம்  நியு டின்சுகியாவிலிருந்து காலை 6.30 மணிக்கு புறப்படும். மறுமார்க்கமாக தாமபரத்தில் இருந்து வரும் 31ம் தேதி முதல் வியாழக்கிழமைகளில் மாலை 6.55 மணிக்கு புறப்படும். மேலும் மேல்மருவத்தூர் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வரும் ஜனவரி 29ம் தேதிவரை தற்காலிகமாக மேல்மருவத்தூரில் நிறுத்தப்படும். அதன்படி தென்மாவட்டங்களுக்கு செல்லும் 7 சிறப்பு ரயில்கள் மேல்மருவத்தூரில் நிறுத்தப்படும்.   இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: