சென்னை: சிலைகள் மாயம், பணியாளர் நியமனத்தில் முறைகேடு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 2 இணை ஆணையர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. அறநிலையத்துறையில் 5 இணை ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து அரசு செயலாளர் விக்ரம் கபூர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி விழுப்புரம் இணை ஆணையர் செந்தில்வேலன் கோவை இணை ஆணையர், கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணை ஆணையர் மங்கையர்க்கரசி ஈரோடு இணை ஆணையர், ரங்கம் ரங்கநாத சுவாமி கோயில் இணை ஆணையர் ஜெயராமன் கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள் இணை ஆணையர், இணை ஆணையர் கஜேந்திரன் திருவண்ணாமலை இணை ஆணையர், பாரதி திண்டுக்கல் இணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதில், மயிலாடு துறை மண்டல இணை ஆணையராக கஜேந்திரன் இருந்த போது தான் கும்பகோணம் பந்தலூர் பசுபதீஸ்வரர் கோயில்களுக்கு சொந்தமான 6 சிலைகள் மாயமானதாக கூறப்படுகிறது.