திருநின்றவூர்: பட்டாபிராம் அமுதூர்மேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன்(42). பாமக மாநில இளைஞரணி துணை தலைவர். இவர் பட்டாபிராம் - பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமுதூர்மேடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த தனியார் கம்பெனி பஸ் மோதி பலியானார். இதனையடுத்து, டிரைவர் பஸ்சை நடுரோட்டில் விட்டு, விட்டு கம்பெனி ஊழியர்களுடன் இருந்து தப்பி ஓடினார். இதனால் ஆத்திரமடைந்த கார்த்திகேயனின் உறவினர்கள் பஸ்சை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்தனர். இதில், பஸ் முழுவதும் எரிந்து எலும்பு கூடானது.