பெங்களூரு: பொங்கல் பண்டிகை முடியும் வரை அமைச்சர் பதவி கோரிக்கையுடன் வர வேண்டாம் என்று மேலவை உறுப்பினர் எம்.டி.பி.நாகராஜியிடம் முதல்வர் எடியூரப்பா காட்டமாக தெரிவித்தார். அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் தொடர் போராட்டம் காரணமாக முதல்வர் எடியூரப்பா காவேரி இல்லத்தில், அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தி வந்தார். கூட்டம் முடிந்த பின்னர் மேலவை உறுப்பினர் எம்.டி.பி. நாகராஜ் முதல்வரை சந்தித்து தொழிலாளர்கள் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. எங்களுக்கு எப்போது அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று கேள்வி எழுப்பினார். அப்போது நிதானத்தை இழந்த முதல்வர் பொங்கல் பண்டிகை முடியும் வரை அமைச்சர் பதவி கோரிக்கை எடுத்துக்கொண்டு வர வேண்டாம் என்று தெரிவித்து தனது அலுவலகத்துக்குள் சென்றார்.