செய்துங்கநல்லூர்: மருதூர் அணைக்கட்டில் சீறிபாயும் தண்ணீர் காண்பதற்கு கண்ணை கவருவதாக உள்ளது. இந்த இடத்தினை சுற்றுலா தலமாக அறிவித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் 7 வது அணைகட்டு மருதூர் அணைக்கட்டு. தாமிரபரணியிலே மிக நீளமான தடுப்பணை இது. இந்த அணைக்கட்டு 4096 அடி நீளம் கொண்டது. அனகோண்டா பாம்புபோல வளைந்து காணப்படும் இந்த அணையில் மருதூர் மேலக்கால், கீழக்கால் மூலமாக சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.