குறையும் பாதிப்பு..! இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,071 பேருக்கு கொரோனா; 336 பேர் உயிரிழப்பு

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 27,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 98,84,100 ஆக அதிகரித்துள்ளது. 336 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 1,43,355 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 30,695 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். 3,52,586 பேருக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 93,88,159 பேர் இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவின் கொடூரம் சமீப காலமாக குறைந்து வருகிறது. தினமும் புதிதாக தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,84,100 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 336 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,43,355 ஆக உயர்ந்துள்ளது.  

இந்தியாவில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 30,695 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93,88,159 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு 3,52,586 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 15 கோடியே 45 லட்சத்து 66 ஆயிரத்து 990 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் புள்ளி விவரம் கூறுகிறது. இந்தியா முழுவதும் நேற்று 8 லட்சத்து 55 ஆயிரத்து 157 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன.

Related Stories: