சென்னை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில நிர்வாகக் குழு மற்றும் மாநிலக் குழுக் கூட்டங்கள் வருகிற 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் திருப்பூர் அருகில் உள்ள செங்கப்பள்ளியில் நடைபெறும். முதல் இரண்டு நாள் நிர்வாகக் குழுக் கூட்டமும், மூன்றாவது நாள் மாநிலக் குழுக் கூட்டமும் நடைபெறும். இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் நல்லகண்ணு, தா.பாண்டியன், மாநிலச் செயலாளர் முத்தரசன், துணைச் செயலாளர்கள் சுப்பராயன் எம்.பி., மு.வீரபாண்டியன், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் சி.மகேந்திரன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு எம்.பி., மாநிலப் பொருளாளர் ஆறுமுகம் உட்பட மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மாநிலக் கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர்கள், மாநிலக் குழு உறுப்பினர்கள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொள்வார்கள்.